
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா முன்னேறியது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தன. குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், குருப் பி பிரிவில் ஆஸ்திரேலிய அணியும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தன. இந்த நிலையில், தற்போது 4-வது மற்றும் கடைசி அணியாக தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும் என தெரிந்திருந்தபோதிலும், தற்போது தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டது. இன்றையப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கு ஆப்கானிஸ்தான் அணிக்கு இருந்த மிக மிக அரிதான வாய்ப்பை அந்த அணி இழந்தது. இதன் மூலம், தென்னாப்பிரிக்க அணி 4-வது மற்றும் கடைசி அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்யும் பட்சத்தில், தென்னாப்பிரிக்காவை இங்கிலாந்து அணி, குறைந்தது 207 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்ற சூழல் இருந்தது.
ஆனால், இன்றையப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், ஆப்கானிஸ்தானுக்கு அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கு இருந்த மிக மிக அரிதான வாய்ப்பு பறிபோனது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.