தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆர்வம்: இங்கிலாந்து பயிற்சியாளர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆர்வமாக இருக்கிறார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் என இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

News image

ஜோஃப்ரா ஆர்ச்சர்

படம் | AP

Updated On :2 மார்ச் 2025, 2:43 pm

DIN

டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆர்வமாக இருக்கிறார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் என இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணிக்காக கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அதன் பின், காயம் காரணமாக அவரால் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியவில்லை. 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆர்ச்சர், இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 42 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

டெஸ்ட்டில் விளையாட ஆர்வம்

இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆர்வமாக இருக்கிறார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் என இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

பிரண்டன் மெக்கல்லம் (கோப்புப் படம்)

பிரண்டன் மெக்கல்லம் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணிக்காக ஜோஃப்ரா ஆர்ச்சர் சரியாக பயன்படுத்தப்படுவதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படும் அபாயம் இருப்பதை கவனத்தில் கொண்டு நாங்கள் செயல்படுகிறோம். ஆனால், அவர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வமாக இருக்கிறார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். அணியின் வேகப் பந்துவீச்சு வரிசையில் அவர் இணைந்தால், இங்கிலாந்து அணியின் வலிமை மேலும் கூடும் என்றார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து அணி வருகிற மே 22 ஆம் தேதி ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. அதன் பின், இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், ஆஷஸ் தொடரிலும் விளையாடவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.