திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

விராட் கோலிக்கு முன்னாள் மே.இ.தீவுகள் வீரர் புகழாரம்!

விராட் கோலியின் போராட்ட குணமும் கிரிக்கெட்டின் மீதான அதீத ஆர்வமும் அவரை மிகப் பெரிய வீரராக மாற்றியுள்ளது.

News image

விராட் கோலி - படம் | AP

Updated On :2 மார்ச் 2025, 7:14 pm IST

விராட் கோலியின் போராட்ட குணமும் கிரிக்கெட்டின் மீதான அதீத ஆர்வமும் அவரை மிகப் பெரிய வீரராக மாற்றியுள்ளதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டி இந்திய அணிக்காக விராட் கோலி விளையாடும் 300-வது ஒருநாள் போட்டியாகும்.

விவ் ரிச்சர்ட்ஸ் பாராட்டு

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில், விராட் கோலியின் போராட்ட குணமும் கிரிக்கெட்டின் மீதான அதீத ஆர்வமும் அவரை மிகப் பெரிய வீரராக மாற்றியுள்ளதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி அவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் நம் அனைவருக்கும் பதிலளிப்பதாக நினைக்கிறேன். உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி சரியாக விளையாடவில்லை. அதன் பின், மீண்டும் சிறப்பான ஃபார்மில் விளையாடி வருகிறார். இதன் காரணமாகவே அவரை மிகப் பெரிய லெஜண்டரி வீரர் எனக் கூறுகிறேன்.

மோசமான ஃபார்மிலிருந்து மீண்டு அனைவராலும் இதுபோன்று விளையாட முடியாது. விராட் கோலியின் போராட்ட குணமும், கிரிக்கெட்டின் மீதான அதீத ஆர்வமும் அவரை சிறப்பாக செயல்பட வைக்கிறது. ஃபீல்டிங்கில் அவர் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவது அவர் எந்த அளவுக்கு போட்டியின் மீது ஆர்வமாக இருக்கிறார் என்பதை பிரதிபலிக்கிறது. விராட் கோலி அவர் மீது 120 சதவிகிதம் நம்பிக்கை வைத்துள்ளார் என்றார்.

இந்திய அணிக்காக 300-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் 7-வது வீரர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.