ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

முடிவுக்கு வந்த 14 வருட ஐபிஎல் பயணம்; பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடவுள்ள டு பிளெஸ்ஸிஸ்!

அடுத்த ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்யப்போவதில்லை என ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் தெரிவித்துள்ளார்.

News image

ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கோப்புப் படம்)

Updated On :29 நவம்பர் 2025, 8:36 pm IST

அடுத்த ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்யப்போவதில்லை என தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் கடந்த 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக அறிமுகமானார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகமான டு பிளெஸ்ஸிஸ் அறிமுகமான முதல் சீசனிலேயே 398 ரன்கள் குவித்து அசத்தினார்.

அவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு மற்றும் 2021 ஆம் ஆண்டு கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியில் முக்கிய வீரராக அங்கம் வகித்துள்ளார்.

இந்த நிலையில், அடுத்த ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்யப்போவதில்லை என ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: 14 சீசன்களுக்குப் பிறகு, அடுத்த சீசனுக்கான ஐபிஎல் ஏலத்தில் என்னுடைய பெயரை பதிவு செய்யப் போவதில்லை என முடிவெடுத்துள்ளேன். இது மிகவும் பெரிய முடிவு. என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் ஐபிஎல் தொடர் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. உலகத் தரத்திலான வீரர்களுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு எனக்கு ஐபிஎல் தொடரில் கிடைத்ததை மிகப் பெரிய அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.

என்னுடைய இதயத்தில் இந்தியாவுக்கென எப்போதும் சிறப்பான இடம் இருக்கும். ஐபிஎல் தொடரில் இனி விளையாடவே மாட்டேன் எனக் கூறமாட்டேன். கண்டிப்பாக விரைவில் மீண்டும் சந்திப்போம்.

இந்த ஆண்டு நான் புதிய சவாலை தேர்ந்தெடுத்துள்ளேன். எதிர்வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடவுள்ளேன். என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் புதிய அடியை எடுத்து வைக்கவுள்ளேன் எனப் பதிவிட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸை தவிர்த்து, டு பிளெஸ்ஸிஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக கடந்த 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டு இடைவெளியில் விளையாடியுள்ளார்.

கடந்த ஐபிஎல் சீசனில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக அவர் விளையாடினார். கடந்த சீசன் அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை. கடந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடிய அவர் 202 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதுவரை 154 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள டு பிளெஸ்ஸி, 4773 ரன்கள் எடுத்துள்ளார்.

41 வயதாகும் டு பிளெஸ்ஸிஸ் இதற்கு முன்பாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவர் ஸல்மி அணிகளுக்காக இரண்டு சீசன்களில் 6 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Former South African captain Faf du Plessis has said that he will not be registering his name in the auction for the next IPL season.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.