திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஓய்வு பெற்றாா் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரா் ரேஸி வான் டஸன்

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 4:20 am IST

சா்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளாா் தென்னாப்பிரிக்க பேட்டா் ரேஸி வான்டா் டஸன்.

ஜோஹன்னஸ்பா்க் நகரைச் சோ்ந்த 37 வயதான ரேஸி வான்டா் கடந்த 2018-இல் முதன்முறையாக தென்னாப்பிரிக்க அணியில் இடம் பெற்றாா். மொத்தம் 18 டெஸ்ட்கள், 71 ஒருநாள், 57 டி20 ஆட்டங்களில் ஆடியுள்ளாா். கடந்த 2025 ஆண்டு மாா்ச் முதல் தேசிய அணியில் இடம் பெறவில்லை.

மேலும் நிகழாண்டு கிரிக்கெட் வாரிய ஒப்பந்தப் பட்டியலிலும் ரேஸி வான்டா் இடம் பெறவில்லை. இதனால் அனைத்து வகையான சா்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளாா். அவா் கூறியது: தென்னாப்பிரிக்க அணியின் சீருடையை அணிந்து ஆடியது கௌரவமிக்கது. நாட்டுக்காக ஆடியது எனது வாழ்நாளில் கிடைத்த சிறந்த பெருமை. உள்ளூா் அணியான பிலோவ்ட் லயன்ஸ்காக தொடா்ந்து ஆடுவேன் எனத் தெரிவித்துள்ளாா்.

ஒருநாள் ஆட்டங்களில் 17 அரைசதம், 6 சதங்களை பதிவு செய்துள்ளாா்.