குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய டேவிட் வார்னர் கைது..! பிஎஸ்எல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல்!

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் குறித்து...

News image

டேவிட் வார்னர். - ஏபி

Updated On :7 ஏப்ரல் 2026, 5:47 pm IST

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (39 வயது) மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால், கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணியில் விளையாடிவரும் வார்னர் இந்தப் பிரச்னையினால் பாகிஸ்தானுக்குச் செலவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சிட்னியில் மரூப்ரா, மலபார் சாலையில் நியூ சௌத் வேல்ஸ் காவல்துறையினர் நடத்திய சோதனையில் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காவலர்கள் நடத்திய சோதனையில் 0.104 என்ற அளவில் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இது ஆஸ்திரேலியாவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கு கூடுதலானது எனக் கூறப்படுகிறது. இதனால், அவர் மீது அபராதம் விதிக்கப்பட்டு, மரூப்ரா காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

டேவிட் வார்னர் அடுத்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. இந்தக் காரணத்தினால், அவர் பிஎஸ்எல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிஎஸ்எல் தொடரில் கராச்சி கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்கும் வார்னர் தனிப்பட்ட காரணத்துக்காக விடுப்பு வாங்கி ஆஸ்திரேலியா சென்றிருந்தார்.

புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் கராச்சி கிங்ஸ் அணிக்கு வார்னர் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துமென கணிக்கப்படுகிறது.

கராச்சி கிங்ஸ் அடுத்த போட்டியில் ஏப்.9ஆம் தேதி விளையாட இருக்கிறது. முன்னதாக, 2013 ஆஷஸ் தொடரில் வார்னர் குடித்துவிட்டு, ஜோ ரூட்டை தாக்கியதும் கவனிக்கத்தக்கது.

Summary

Former Australian cricketer David Warner charged with drink driving.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.