மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

டி20 உலகக் கோப்பைத் தொடரில் அபிஷேக் சர்மா தாக்கத்தை ஏற்படுத்துவார்: ரவி சாஸ்திரி

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் அபிஷேக் சர்மா தாக்கத்தை ஏற்படுத்துவார் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

News image

அபிஷேக் சர்மா - படம் | பிசிசிஐ

Updated On :22 ஜனவரி 2026, 4:32 pm

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் அபிஷேக் சர்மா தாக்கத்தை ஏற்படுத்துவார் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி நாக்பூரில் நேற்று (ஜனவரி 21) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அசத்தியது.

இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 35 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். அவரது அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 238 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்த அபிஷேக் சர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், எதிர்வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் அபிஷேக் சர்மா மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துவார் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் கூறியதாவது: டி20 போட்டிகளில் உலகின் நம்பர் 1 பேட்டர் அபிஷேக் சர்மா என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அவர் மிகவும் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் அதிரடியில் மிரட்டினார். அவர் ஆட்டத்தினை நியூசிலாந்திடமிருந்து இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார்.

அபிஷேக் சர்மாவின் ஆட்டத்தை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அவரது தன்னம்பிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடர் சொந்த மண்ணில் நடைபெறுவதால் ரசிகர்களின் ஆதரவு அபிஷேக் சர்மாவுக்கு அதிகமாக இருக்கும். உலகக் கோப்பைத் தொடரில் அவர் அதிரடியாக விளையாடினால், இந்திய அணி மற்றுமொரு உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பிருக்கிறது என்றார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

Summary

Former Indian team coach Ravi Shastri has stated that Abhishek Sharma will make an impact in the ICC T20 World Cup tournament.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.