காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

எஸ்ஏ20: பிரெவிஸ் அதிரடியால் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரிடோரியா கேபிடல்ஸ்!

எஸ்ஏ20 கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரிடோரியா கேபிடல்ஸ் அணி குறித்து...

Dewald Brevis and Pretoria Capitals.

டெவால்டு பிரெவிஸ், பிரிடோரியா கேபிடல்ஸ். - படங்கள்: எக்ஸ் / பிரிடோரியா கேபிடல்ஸ்.

Published On :

எஸ்ஏ20 கிரிக்கெட்டில் பிரிடோரியா கேபிடல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த அணி இரண்டாவது முறையாக எஸ்ஏ20 வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

எஸ்ஏ20 லீக்கில் குவாலிஃபயர் முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் பிரிடோரியா கேபிடல்ஸ் அணியும் நேற்றிரவு (ஜன.21) மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி பேட்டிங் தேர்வு செய்து, 20 ஓவர்களில் 170/7 ரன்கள் எடுத்தது.

இந்த அணியில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 50, ஜோர்டன் ஹெர்மன் 41 ரன்கள் எடுத்தார்கள்.

பிரிடோரியா கேபிடல்ஸ் அணி சார்பில் பந்துவீசிய பிரைஸ் பார்சன்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

அடுத்து பேட்டிங் செய்த பிரிடோரியா கேபிடல்ஸ் அணி 18.3 ஓவர்களில் 172/3 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த அணியில் அதிகபட்சமாக டெவால்டு பிரெவிஸ் 75* (38 பந்துகளில்), பிரைஸ் பார்சன்ஸ் 60 ரன்கள் எடுத்தார்கள்.

பந்துவீச்சு, பேட்டிங்கில் அசத்திய பிரைஸ் பார்சன்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.

டெவால்டு பிரெவிஸ் சிறப்பாக விளையாடியதால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

Summary

In the SA20 cricket tournament, the Pretoria Capitals team has advanced to the final.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.