காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

யு19 உலகக் கோப்பை: அதிவேக சதமடித்து ஆஸி. வீரர் புதிய சாதனை!

யு19 உலகக் கோப்பையில் புதிய சாதனை நிகழ்த்திய ஆஸி. வீரர் குறித்து...

Will Malajczuk

சதமடித்த மகிழ்ச்சியில் ஆஸி. வீரர். - படம்: ஐசிசி

Published On :

யு19 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் வில் மலாஜ்சுக் (18 வயது) அதிவேகமாக சதமடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஜப்பானுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

யு19 உலகக் கோப்பை குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜப்பான் பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் ஜப்பான் அணி 201/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 29.1 ஓவர்களில் 204/2 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் வில் மலாஜ்சுக் 55 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

வில் மலாஜ்சுக் 51பந்துகளில் சதமடித்து புதிய சாதனையை படைத்தார்.

யு19 உலகக் கோப்பையில் அதிவேக சதமடித்தவர்கள்

1. வில் மலாஜ்சுக் - 51பந்துகள் (ஆஸ்திரேலியா, 2026 )

2. காசிம் அக்ரம் - 63 பந்துகள் (பாகிஸ்தான், 2022)

3. ராஜ் பாவா - 69 பந்துகள் (இந்தியா, 2022)

4. விரன் சமுடிதா - 75 பந்துகள் (இலங்கை, 2026)

5. ஜார்ஜ் வான் ஹீர்டன் - 89 பந்துகள் (தெ.ஆ. 2022)

Summary

U19 World Cup: Malajczuk's fastest record ton sets up Australia's biggest win

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.