5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

இந்தியாவில் டி20 விளையாட மறுத்தால் வங்கதேசம் மீது கடும் நடவடிக்கை?

இந்தியாவில் விளையாட மறுத்தால் வங்கதேசம் மீது ஐசிசி கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தகவல்

News image

டி20 உலகக் கோப்பை - ஐசிசி

Updated On :23 ஜனவரி 2026, 5:44 pm IST

இந்தியாவில் டி20 போட்டிகளை நடத்த மறுத்தால் வங்கதேசத்தின் மீது நடவடிக்கை எடுக்க ஐசிசி பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு காரணங்களால், வங்கதேசம் அணி இந்தியாவில் நடைபெறும் டி20 போட்டிகளில் விளையாட மறுத்தது சமீபத்தில் சர்ச்சையைக் கிளப்பியது. மேலும், தங்களது டி20 போட்டிகளை இலங்கையில் நடத்தவும் ஐசிசி-யிடம் வங்கதேசம் கோரிக்கை விடுத்தது. இருப்பினும், வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது.

இந்த நிலையில், இந்தியாவில் டி20 போட்டிகளை நடத்த ஒப்புக்கொள்ளாவிட்டால், வங்கதேசத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க ஐசிசி தலைவர் ஜெய் ஷா பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து விவாதிக்க துபையில் அழைப்பு விடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

என்ன பிரச்னை?

வங்கதேசத்தில் இந்துக்கள் கொலை செய்யப்பட்டதான் எதிரொலியாக, வங்கதேச வீரர் முஷ்தஃபிகுர் ரஹ்மானை ஐபிஎல் நிர்வாகம் வேண்டிக்கொண்டதன் பேரில் கேகேஆர் அணி நீக்கியது.

இந்தக் காரணத்தினால், வங்கதேச அணியினர் இந்தியாவில் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி இலங்கையில் விளையாட ஐசிசியிடம் அனுமதி கோரினர்.

Summary

Will Bangladesh face severe action if they refuse to play T20 matches in India?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.