ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

அசராமல் சிக்ஸர் அடிப்பது எப்படி?: ரஸ்ஸல் சொல்லும் ரகசியம்!

நான் காலையில் எழும்போது என் வாழ்க்கையில் இன்னொரு சிறந்த ஆட்டத்தை விளையாடக் கிடைத்துள்ள...

News image
Updated On :6 ஏப்ரல் 2019, 11:48 am

எழில்

நேற்று பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில், தனது சிக்ஸர் மழையால் பெங்களூரு அணியிடமிருந்த வெற்றி வாய்ப்பைத் தட்டிப் பறித்து கொல்கத்தாவுக்கு நம்பமுடியாத வெற்றியைத் தேடித்தந்தார் ஆண்ட்ரு ரஸ்ஸல்.

முதலில் ஆடிய பெங்களூரு 205/3 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா 206/5 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் 7 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 13 பந்துகளில் 48 ரன்களை விளாசி கிரிக்கெட் உலகைத் தன் பக்கம் திருப்பியுள்ளார் ரஸ்ஸல்.

இந்த ஐபிஎல் போட்டியில் ரஸ்ஸலைத் தடுத்த ஒரே பந்துவீச்சாளர் தில்லியின் ரபாடா தான். சூப்பர் ஓவரில் அருமையான யார்க்கரால் ரஸ்ஸலை க்ளீன் போல்ட் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மற்றபடி, இந்த ஐபிஎல் போட்டியில் அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் புதிராக உள்ளார் ரஸ்ஸல். சரி, இதன் ரகசியம் என்ன? அசராமல் எப்படி சிக்ஸர்கள் அடிக்கிறீர்கள் என்கிற கேள்விக்கு ரஸ்ஸல் அளித்துள்ள பதில்:

நான் மிகச்சிறந்த வீரன் என்பது எனக்குத் தெரியும். அதுகுறித்து பெரிதாக யோசிக்கமாட்டேன். நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என எண்ணுவேன். நீங்கள் சிறப்பாக விளையாடும்போது ஏதோவொரு கட்டத்தில் தடுமாறுவீர்கள். என்னுடைய இந்தச் சிறப்பான ஆட்டம் தொடரவேண்டும் என எண்ணுகிறேன். எதையும் லேசாக எடுத்துக்கொள்வதில்லை. முந்தைய ஆட்டத்தில் 40 ரன்கள் எடுத்ததால் அடுத்த ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடுவேன் எனச் சொல்லமாட்டேன். இது புதிய ஆட்டம், ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாகத்தான் அணுகவேண்டும். 

ஒருகட்டத்தில் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும்போது அதை நிறுத்தமாட்டீர்கள். தொடர்ந்து சிறப்பாக விளையாடிக்கொண்டே இருப்பீர்கள். நான் காலையில் எழும்போது என் வாழ்க்கையில் இன்னொரு சிறந்த ஆட்டத்தை விளையாடக் கிடைத்துள்ள வாய்ப்பாகவே கருதுவேன். 

இப்படி சிக்ஸர்கள் அடிக்கும்  நான் அதற்காக சிறப்பு உணவுகள் எதையும் உண்பதில்லை. நல்ல மனநிலையும் திட்டமிடுதலுமே என் அதிரடி ஆட்டத்துக்குக் காரணம். என் மனநிலை எப்போதும் சுதந்தரமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.