ஐபிஎல்: ஸ்டம்புகளை பேட்டால் தட்டிவிட்டுச் சென்ற ரோஹித் சர்மாவுக்கு அபராதம்!

இதனால் கடுப்பான ரோஹித் சர்மா வெளியேறும்போது கள நடுவர் பக்கமிருந்த ஸ்டம்பை பேட்டால் தட்டி விட்டுச் சென்றார்...
ஐபிஎல்: ஸ்டம்புகளை பேட்டால் தட்டிவிட்டுச் சென்ற ரோஹித் சர்மாவுக்கு அபராதம்!
Published on
Updated on
1 min read

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது மும்பை. முதலில் ஆடிய கொல்கத்தா 232/2 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய மும்பை 198/7 ரன்களை எடுத்து தோல்வியுற்றது.

இந்த ஐபிஎல் ஆட்டத்தில், 12 ரன்களில் குர்னி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. நடுவர் கொடுத்த அறிவிப்புக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்தார். டிஆர்எஸ் முறையில் அது அம்பயர்ஸ் கால் எனத் தீர்ப்பானது. இதனால் அவர் களத்தை விட்டு வெளியேறவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இதனால் கடுப்பான ரோஹித் சர்மா வெளியேறும்போது கள நடுவர் பக்கமிருந்த ஸ்டம்பை பேட்டால் தட்டி விட்டுச் சென்றார். 

இதையடுத்து ஐபிஎல் விதிமுறைகளை மீறியுள்ளதாக ரோஹித் சர்மாவுக்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com