குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தொடர்ச்சியாக 5-வது வெற்றி: பிளே ஆஃப்புக்கு விடாது போராடும் பஞ்சாப்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 5:29 pm

DIN

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட் செய்த கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தன.

150 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் மற்றும் மந்தீப் சிங் களமிறங்கினர். மந்தீப் ரன் குவிக்க திணறியதால், ராகுல் துரிதமாக ரன் சேர்க்க வேண்டிய பொறுப்பு ஏற்பட்டது. இதன்பிறகு, மந்தீப்பும் ரன் எடுக்கத் தொடங்கியதால், இருவரும் பாட்னர்ஷிப் அமைத்தனர். பஞ்சாப் அணி பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து, வருண் சக்கரவர்த்தி சுழலில் ராகுல் (28 ரன்கள்) ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கிய கிறிஸ் கெயில் வருண் மற்றும் சுனில் நரைன் பந்துகளில் சிக்ஸர்களைப் பறக்கவிட வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 8-க்கு வந்தது. 

மந்தீப்பும் கெயிலுடன் பாட்னர்ஷிப் அமைக்க, ஆட்டம் கொல்கத்தாவிடம் இருந்து நழுவியது. மந்தீப் சிங் 49-வது பந்திலும், கெயில் 25-வது பந்திலும் அவர்களது அரைசதத்தை எட்டினர். இதன்பிறகு, பவுண்டரிகள் பறக்க வெற்றிக்குத் தேவையான ஓவருக்கு 6-க்கு கீழ் குறைந்தது.

கடைசி 2 ஓவர்களில் 3 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், பெர்குசன் பந்தில் கெயில் ஆட்டமிழந்தார். அவர் 29 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து, நிகோலஸ் பூரனும், மந்தீப் சிங்கும் வெற்றியை உறுதி செய்தனர்.

18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்த பஞ்சாப் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது பஞ்சாப் தொடர்ச்சியாக பெறும் 5-வது வெற்றி.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த 56 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.