வீட்டுக்கு மஞ்சள் வண்ணம் பூசிய சிஎஸ்கே ரசிகர்: தோனி உருக்கம்
இவர்கள்தான் சிஎஸ்கேவின் மிகப்பெரிய ரசிகர்கள்...


கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகில் உள்ள அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன். சிஎஸ்கே அணி மற்றும் தோனியின் தீவிர ரசிகரான இவர், தனது வீட்டுச் சுவரில் மஞ்சள் வண்ணம் பூசி தோனி மற்றும் சிஎஸ்கே அணி தொடர்பான படங்களை வரைந்துள்ளார்.
துபையில் பணிபுரியும் கோபி கிருஷ்ணன், விடுமுறைக்காகத் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். தோனியின் மீதான தனது பாசத்தை வெளிப்படுத்துவதற்காக தனது வீட்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் சிஎஸ்கேவின் மஞ்சள் வண்ணத்தைப் பூசி ஹோம் ஆஃப் தோனி ஃபேன், விசில் போடு என்கிற வாசகங்களையும் வீட்டுச் சுவரில் எழுதியுள்ளார்.
இந்த வீடு தொடர்பான செய்திகள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகின. இதையடுத்து இதைப் பற்றி படங்களுடன் ட்வீட் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
தனக்கும் சிஎஸ்கே அணிக்கும் கெளரவம் அளித்த கோபி கிருஷ்ணனுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார் தோனி. இதுபற்றி அவர் கூறியதாவது:
இதை இன்ஸ்டகிராமில் பார்த்தேன். இது மிகப்பெரிய மரியாதை. இது எனக்கானது மட்டுமல்ல, இவர்கள்தான் சிஎஸ்கேவின் மிகப்பெரிய ரசிகர்கள். அவர்கள் இதைச் செய்த விதம், சிஎஸ்கே மற்றும் என் மீதான அவர்களுடைய உணர்வை வெளிப்படுத்துகிறது. இதைச் சுலபமாகச் செய்துவிட முடியாது. நீங்கள் முடிவு செய்து, அதற்கு ஒட்டுமொத்தக் குடும்பமும் ஆதரவளிக்க வேண்டும். அதற்குப் பிறகே இதைச் செயல்படுத்த முடியும். இது நீண்ட நாள் நிலைக்கும். இது சமூகவலைத்தளங்களில் பதிவு போட்டு பிறகு மாற்றுவது போல் அல்ல. ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் என்னுடைய நன்றி என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...