ஐபிஎல் போட்டியிலிருந்து விலகிய நடராஜனுக்கு அறுவை சிகிச்சை
முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த தமிழக வீரரான டி. நடராஜன், முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.
30 வயதான நடராஜனுக்கு ஆஸ்திரேலிய தொடரின்போதே முழங்காலில் காயம் ஏற்பட்டது. எனினும் அவா் தொடா்ந்து விளையாடியதால், அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் அளவுக்கு காயம் பெரிதானது.
இந்த வருட ஐபிஎல் போட்டியில் இரு ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய நடராஜன், முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். இதுபற்றி ட்விட்டரில் நடராஜன் தெரிவித்ததாவது:
இன்று என் முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. என்னை நன்குக் கவனித்துக்கொண்ட மருத்துவக் குழுவுக்கும் பிசிசிக்கும் நன்றி. மற்றும் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...