பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சஹார் தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான தருணம் மைதானத்தில் அரங்கேறியது.
ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் பஞ்சாப் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிக்க | சென்னையை அடித்து நொறுக்கிய ராகுல்: கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி!
இந்த ஆட்டத்துக்குப் பிறகு மைதானத்திலிருந்து ஆட்டத்தைப் பார்த்து ரசித்து வந்த தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்தினார் தீபக் சஹார். அவரும் புன்னகையுடன் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ள இருவரும் கட்டியணைத்துக் கொண்டனர். சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி் உள்பட அருகிலிருந்த அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மைதானத்தில் அரங்கேறிய இந்த நெகிழ்ச்சியானத் தருணம் விடியோவாக வெளியாகி சமூக ஊடகங்களில் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
தீபக் சஹாரும் இதை சிறப்புமிக்க தருணம் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.