ஐபிஎல்: நடராஜனுக்கு கரோனா பாதிப்பு
ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.


ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது.
ஹைதராபாத் - தில்லி அணிகள் இன்று துபையில் மோதவுள்ளன. இந்நிலையில் பரிசோதனையில் ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
நடராஜனுடன் தொடர்பில் இருந்த சக வீரர் விஜய் சங்கர், விஜய் குமார் (அணி மேலாளர்), ஷ்யாம் சுந்தர் (பிசியோதெரபிஸ்ட்), அஞ்சனா வன்னா (மருத்துவர்), துஷார் கேத்கர் (லாஜிஸ்டிக்ஸ் மேலாளர்), வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளர் பி. கணேசன் ஆகியோரும் முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
ஹைதராபாத் அணியைச் சேர்ந்த அனைவரும் இன்று காலை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அனைவருக்கும் கரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் துபையில் நடைபெறவுள்ள ஹைதராபாத் - தில்லி ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...