மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தோனி பாராட்டியது எனக்கு ஆச்சர்யமாக இல்லை: சாய் கிஷோர்

குஜராத் டைட்டன்ஸ் அணியின் இடக்கை சுழல் பந்து வீச்சாளர் சாய் கிஷோர் சிஎஸ்கே கேப்டன் தோனியின் பாராட்டு எனக்கு ஆச்சர்யமாக இல்லை எனக் கூறியுள்ளார்.

News image
Updated On :24 மே 2022, 6:31 am

DIN

குஜராத் டைட்டன்ஸ் அணியின் இடக்கை சுழல் பந்து வீச்சாளர் சாய் கிஷோர் சிஎஸ்கே கேப்டன் தோனியின் பாராட்டு எனக்கு ஆச்சர்யமாக இல்லை எனக் கூறியுள்ளார்.  

25 வயது சாய் கிஷோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 வருடம் நெட் பவுலராக இருந்தவர். இந்த முறை குஜராத் அணி 3 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்தது. இந்த வருட ஐபிஎல் போட்டியில் 3 ஆட்டங்களில் 10 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இரு ஆட்டங்களில் அவர் பந்துவீச்சில் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடிக்கப்படவில்லை. சிஎஸ்கேவுக்கு எதிராக மட்டும் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளைக் கொடுத்தார். 3 ஆட்டங்களில் எகானமி - 5.80 

தோனி உங்களது பந்து வீச்சைக் குறித்து பாராட்டியது எப்படி இருந்தது என கேள்வி கேட்ட போது, “ உண்மையில் எனக்கு பெரிதாக ஆச்சர்யமில்லை. எனக்கு எனது பந்து வீசும் திறன் பற்றித் தெரியும். நான் சிஎஸ்கேவுக்கு விளயாடினாலும் விளையாடவிட்டாலும் எனக்கு என் மீதான சந்தேகம் இருந்ததில்லை. உள்ளூர் போட்டிகளில் 40-45 போட்டிகள் விளையாடி இருக்கிறேன். அதனால் எனக்கு அனுபவம் இருக்கிறது. சிஎஸ்கேவில் ஜடேஜா இருப்பதால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அதற்காக வருந்தியதில்லை. உள்ளூர் போட்டிகளில் நன்றாகவே விளையாடி வருகிறேன்” என கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.