
லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
ஐபிஎல் தொடரின் 37ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 7 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை மும்பை அணி பதிவு செய்யுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.