மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

தில்லி வீரர்களை கட்டியணைத்து ஆறுதல்படுத்திய ஷாருக் கான்!

கேகேஆர் அணியின் உரிமையாளரும் நடிகருமான ஷாருக் கான் தில்லி வீரர்களை கட்டியணைத்த புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன.

News image
Updated On :4 ஏப்ரல் 2024, 12:09 pm IST

கேகேஆர் அணியின் உரிமையாளரும் நடிகருமான ஷாருக் கான் தில்லி வீரர்களை கட்டியணைத்த புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுக்க, தில்லி அணி 17.2 ஓவா்களில் 166 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. 106 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டி முடிவடைந்த பிறகு கொல்கத்தா அணியின் உரிமையாளரும் பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் வீரர்களை சந்தித்து பேசினார். தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்தினை கட்டியணைத்து ஆறுதல் படுத்தினார் ஷாருக்கான்.

தில்லி அணியின் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை தலையை ஆட்டி கட்டிப்பிடிப்பார். இந்த புகைப்படங்கள், விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கார் விபத்துக்குப் பிறகு ஐபிஎல் கிரிக்கெட் விளையாடும் ரிஷப் பந்த் 25 பந்துகளில் 55 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். சூப்பர் ஸ்டிரைக்கர் விருதினை பெற்றார்.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் ரூ.1100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.