கேகேஆர் அணியின் உரிமையாளரும் நடிகருமான ஷாருக் கான் தில்லி வீரர்களை கட்டியணைத்த புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுக்க, தில்லி அணி 17.2 ஓவா்களில் 166 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. 106 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டி முடிவடைந்த பிறகு கொல்கத்தா அணியின் உரிமையாளரும் பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் வீரர்களை சந்தித்து பேசினார். தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்தினை கட்டியணைத்து ஆறுதல் படுத்தினார் ஷாருக்கான்.
தில்லி அணியின் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை தலையை ஆட்டி கட்டிப்பிடிப்பார். இந்த புகைப்படங்கள், விடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கார் விபத்துக்குப் பிறகு ஐபிஎல் கிரிக்கெட் விளையாடும் ரிஷப் பந்த் 25 பந்துகளில் 55 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். சூப்பர் ஸ்டிரைக்கர் விருதினை பெற்றார்.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் ரூ.1100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.