காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் விலகியுள்ளதை அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உறுதிப்படுத்தியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் மிட்செல் மார்ஷ் தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 4 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 4 போட்டிகளில் அவர் 61 ரன்கள் எடுத்துள்ளார். காயம் காரணமாக கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி மிட்செல் மார்ஷ் தாயகம் திரும்பினார். இதனையடுத்து, ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில், காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் விலகியுள்ளதை அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் பேசியதாவது: மிட்செல் மார்ஷ் மீண்டும் அணியுடன் இணைவார் என நான் நினைக்கவில்லை. அவர் காயத்திலிருந்து குணமடைய வேண்டும் என்பதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெளிவாக இருக்கிறது. அவர் குணமடைவதற்கு இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகும் எனத் தெரிகிறது. டி20 உலகக் கோப்பைக்காக அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக நான் நினைக்கவில்லை என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள தில்லி கேப்பிடல்ஸ் 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.