நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

ஐபிஎல் போட்டியில் இம்பாக்ட் பிளேயர் விதிமுறையினால் ஆல்ரவுண்டர்களின் நிலைமை ஆபத்தில் உள்ளதாக அக்‌ஷர் படேல் தெரிவித்துள்ளார்.

News image

அக்‌ஷர் படேல் - Kamal Kishore

Updated On :25 ஏப்ரல் 2024, 2:31 pm IST

ஒவ்வொரு அணியும் ஆட்டத்துக்கு முன்பு வழக்கமாகக் கொடுக்கப்படும் 11 வீரர்களின் பெயர்களோடு 4 மாற்று வீரர்களின் பெயர்களையும் அளிக்க வேண்டும். அந்த 4 வீரர்களில் ஒருவரை ஆட்டத்தின் நடுவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த இம்பாக்ட் பிளேயர் விதிமுறை கடந்தாண்டு ஐபிஎல் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனை எதிர்க்கும் விதமாக முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஆர்சிபி வேகப் பந்து வீச்சாளர் முகமது சிராஜ் உள்ளிட்டோர் தங்களது எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

நேற்றையப் போட்டியில் 66 ரன்கள், 1 விக்கெட் எடுத்த தில்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் அக்‌ஷர் படேல், “ஒரு ஆல்ரவுண்டராக இம்பாக்ட் பிளேயர் விதிமுறையினால் ஆல்ரவுண்டர்களின் நிலைமை ஆபத்தில் உள்ளதாக நினைக்கிறேன். அணியின் தேவைக்கேற்ப 6 பேட்டர்கள் அல்லது 6 பௌலர்களாக களமிறங்க நினைக்கிறார்களே தவிர ஆல்ரவுண்டருடன் செல்ல விரும்புவதில்லை.

Story image

Kamal Kishore

நான் பேட்டிங் ஆர்டரில் 3ஆவது இடத்தில் களமிறங்குவேன் என நினைக்கவில்லை. குஜராத்தில் 3 ஸ்பின்னர்கள் இருப்பதால் என்னை அனுப்ப முடிவெடுத்தனர். பின்னர் ரிஷப் பந்த்தும் விளையாட விரும்பினார். பின்னர் நாங்கள் கலந்தாலோசித்து இந்த முடிவினை எடுத்தோம். பந்தின் வேகத்தினை மாற்றுவது எனக்கு பெரிய மாற்றத்தினை கொடுத்துள்ளது. மெதுவான பந்துகள் மீது தற்போது எனக்கு நல்ல நம்பிக்கை பிறந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.