ஐபிஎல் போட்டியின் 43-ஆவது போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 257 ரன்கள் குவித்தது.
தொடக்க முதலே அதிரடியாக ஆடிய தில்லி அணியின் தொடக்க வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் 27 பந்துகளில் 84 ரன்கள் அடுத்து அசத்தினார்.
அபிஷேக் போரல் 36, சாய் ஹோப் 41, ரிஷப் பந்த் 29 எடுத்தார்கள். அக்ஷர் படேல் 11, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 48 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
மும்பை அணி சார்பாக லூக் வுட், பும்ரா, பியூஷ் சாவ்லா, மொகமது நபி தலா 1 விக்கெட் அடித்துள்ளார்கள்.
இதுதான் தில்லியின் அதிகபட்ச ஐபிஎல் ரன்கள் ஆகும். இதற்கு முன்பாக 2011இல் அதிகபட்ச 231 ரன்கள் எடுத்திருந்தது.