கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அணியுடன் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்கவுள்ளது. அனைத்து அணியின் வீரர்களும் தங்களை ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அணியுடன் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் ஆரம்ப போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறுவது சந்தேகம் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் அணியுடன் பயிற்சி முகாமில் இணைந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்கவில்லை.
கடந்த ஆண்டு அக்டோபரில் மீண்டும் ஸ்ரேயாஸ் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர், தசைப்பிடிப்பு காரணமாக மீதமுள்ள போட்டிகளில் அணியில் இடம்பெறவில்லை. ரஞ்சி கோப்பையில் மும்பை அணிக்காக அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் அவர் விளையாடினார்.
அணியுடன் பயிற்சி முகாமில் இணைந்துள்ளபோதிலும், அவர் எந்த அளவுக்கு உடல் தகுதியுடன் இருக்கிறார் என்பது தெரியவில்லை. கொல்கத்தா அணி தனது முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.