‘கிங் கோலி’ என அழைக்காதீர்கள்: விராட் கோலி வேண்டுகோள்!

பிரபல ஆர்சிபி வீரர் விராட் கோலி தன்னை ரசிகர்கள் கிங் கோலி என அழைக்க வேண்டாமெனக் கூறியுள்ளார்.
விராட் கோலி
விராட் கோலிபடம்: ஆர்சிபி / எக்ஸ்

பிரபல ஆர்சிபி வீரர் விராட் கோலி தன்னை ரசிகர்கள் கிங் கோலி என அழைக்க வேண்டாமெனக் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கடந்த 15ஆண்டுகளாக ஆர்சிபி அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு போட்டியில் கூட வென்றதில்லை. அந்த வரலாற்றை மாற்ற ஆர்சிபி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஏற்கெனவே இறங்கிவிட்டனர்.

விராட் கோலி
சென்னை வந்தடைந்த ஆர்சிபி அணியினர்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து ஜனவரி மாதம் லண்டன் சென்ற அவர் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக எக்ஸ் வலைத்தளப் பதிவின் மூலம் தெரிவித்தார். இதனால் ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் விராட் கோலி பங்கேற்பாரா என்கிற கேள்வி எழுந்தது.

ஐபிஎல் தொடங்கியதில் இருந்து ஆர்சிபி அணியில் பயணித்து வரும் விராட் கோரி நாளை (மார்ச் 19) நடைபெறும் அந்த அணியின் 'அன்பாக்ஸ்' நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

அங்கு விராட் கோலி, “ என்னை ரசிகர்கள் ‘கிங் கோலி’ என அழைக்க வேண்டாம். அப்படி அழைக்கும்போது எனக்கு கூச்சமாக இருக்கிறது என டு பிளெஸ்ஸிடம் கூறியிருந்தேன். தயவு செய்து, இனிமேல் விராட் கோலி என்றே அழையுங்கள்" என ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com