ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ரிஷப் பந்த் உள்ளுணர்வு சார்ந்த கேப்டன்: கங்குலி புகழாரம்!

தில்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் கங்குலி ரிஷப் பந்தினை புகழ்ந்து பேசியுள்ளார்.

News image

ரிஷப் பந்த் - PTI

Updated On :15 மே 2024, 12:01 pm

தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 43 பந்துகளில் 88 ரன்கள் அடித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் கேப்டன் 2ஆவது முறையாக ஆட்ட நாயகன் விருது பெருவது இதுவே முதல் முறையாகும். லக்னௌவுக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாகவே விளையாடினார்.

கார் விபத்திலிருந்து குணமடைந்து வந்த ரிஷப் பந்த் தனது அருமையான ஃபார்மினை மீண்டும் கொண்டு வந்துள்ளார். 13 போட்டிகளில் 446 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 40.54. ஸ்டிரைக் ரெட் 155.40 ஆகும்.

26 வயதான ரிஷப் பந்த் ஐபிஎல் தொடரில் தில்லி அணிக்கு கேப்டானாக செயல்பட்டு வருகிறார். ஜியோ சினிமாஸில் பேசிய கங்குலி கூறியதாவது:

ரிஷப் பந்த் இளைமையான கேப்டன்; காலப்போக்கில் அதிகமாக கற்றுக்கொள்வார். தொடருக்கு முன்பு முழுவதுமாக ரிஷப் பந்த விளையாடுவாரா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. ஆனால், ரிஷப் காயத்திலிருந்து மீண்டுவந்து தொடர் முழுவதும் விளையாடினார்.

ஐபிஎல் 10 அணிகளாக மாறியபிறகு இந்திய வீரர்கள் மிகவும் முக்கியம். ரிஷப் பந்த் தொடர் முழுவதும் விளையாடியதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சில நேரங்களில் கேப்டன்சியில் தவறிழைத்தாலும் பல நேரங்களில் சூழ்ச்சித்திறமுடைய தன்னுடைய தலைமைப் பண்பினை வெளிப்படுத்தியுள்ளார் பந்த். காலம் வரும்போது சிறந்த கேப்டனாக மாறுவார்.

முதல்நாளில் இருந்து யாரும் சிறந்த கேப்டனாக உருவாக முடியாது. ஆனால் பந்த் இயல்பான உள்ளுணர்வு சார்ந்த கேப்டன். அந்த நேரத்தில் ஆடுகளத்தில் திட்டமிடுபவர். இன்னும் அனுபவத்தினால் சிறந்த கேப்டனாக மாறுவார் என்றார்.

தில்லி அணி இந்த ஐபிஎல் தொடரில் 7 வெற்றி 7 தோல்விகளை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.