தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
சின்னசாமி திடலில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தொடர்ச்சியாக 4ஆவது அரைசதம் அடிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹேசில்வுட் பந்தில் கீப்பருக்கு மேலாக ரேம்ப் ஷாட்டில் ஆட்டமிழந்தார்.
28 இன்னிங்ஸில் 1 முறை மட்டுமே ஒற்றை இலக்க எண்ணில் ஆட்டமிழந்துள்ளார்.
Sai Sudharsan in IPL
— Broken Cricket (@BrokenCricket) April 2, 2025
35, 11, 20, 65*, 14, 22, 62*, 53, 19, 20, 47, 43, 96, 45, 37, 45, 33, 31, 35, 12, 31, 65, 84*, 6, 103, 74, 63, 49
Only 1 Single Digit in 28 Innings ð²#RCBvsGT pic.twitter.com/4v1SY3Eres
மற்ற அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் இவருக்கு இந்தியா முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஐபிஎல் சீசனில் மட்டும் 186 ரன்களை குவித்து அதிக ரன்கள் பட்டியலில் 2ஆம் இடம் பிடித்துள்ளார். 189 ரன்களுடன் நிகோலஸ் பூரன் முதலிடத்தில் இருக்கிறார்.
ஒட்டுமொத்தமாக 28 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1,220 ரன்களை எடுத்துள்ளார். 8 அரைசதங்கள், 1 சதத்துடன் சராசரி 48.8ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sai Sudharsan!ð¥ð«¡ pic.twitter.com/06tHpIPwoC
— RVCJ Media (@RVCJ_FB) April 2, 2025
இதனால் வட இந்திய ஊடகங்களிலும் சாய் சுதர்சனை “மிஸ்டர் கன்சிஸ்டன்ட்” எனப் புகழ்ந்து வருகிறார்கள்.
தொடக்க கால ஐபிஎல் போட்டிகளில் ஸ்டிரைக் ரேட் பிரச்னை இருந்தது. தற்போது, அதிரடியாகவும் விளையாடுவதால் சாய் சுதர்சன் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
No attitude
— Ayyappan (@Ayyappan_1504) April 2, 2025
No Drama
No Justice tags
Just Plays good Cricket , Sai sudharsan for you ð#RCBvsGT pic.twitter.com/VWHMdVCkOV
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










