இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பேட்டிங்கில் ஆணவம் கூடாது, ஐபிஎல் வித்தியாசமானது..! விராட் கோலியின் பேட்டி!

ஆர்சிபியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டி...

News image
விராட் கோலி- படம்: ஏபி
Updated On :9 ஏப்ரல் 2025, 1:06 pm

DIN

ஆர்சிபியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் பேட்டிங்கில் ஈகோ (ஆணவம்) இருக்கக் கூடாது எனக் கூறியுள்ளார்.

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய வீரர் அரைசதம் கடந்து முடிவில் 67 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இது விராட் கோலி 99-வது டி20 அரைசதமாகவும் ஐபிஎல்-இல் 57ஆவதாகவும் பதிவானது. இதன் மூலம், டி20 போட்டிகளில் 13,000 ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக விராட் கோலி மாறினார்.

இது குறித்து ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி பேசியதாவது:

பேட்டிங்கில் 'ஈகோ' கூடாது

பேட்டிங்கில் ஈகோ (ஆணவம்) இருக்கக் கூடாது. யாரையும் நாம் அதிகமாக நிழலடிப்புச் செய்யவும் முயற்சிக்கக் கூடாது.

எப்போதும் போட்டியின் சூழ்நிலையை உணர்ந்து விளையாட வேண்டும். நான் எப்போதுமே சூழ்நிலைக்கு தகுந்தவாறுதான் விளையாடுவேன். இது குறித்து நானே என்னைப் பெருமையாக நினைப்பேன்.

நான் பேட்டிங்கில் நல்ல ரிதமில் இருந்தால் நானாகவே முன்னெடுத்து விளையாடுவேன்.

வேறு யாராவது நல்ல ரிதமில் விளையாடினால் அவர்கள் முன்னெடுத்து விளையாடுவார்கள்.

ஆர்சிபியில் பெரிய தொடக்கம் கிடைக்கவில்லை

முதல் 3 ஆண்டுகளில் எனக்கு ஆர்சிபியில் டாப் ஆர்டரில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதனால், ஐபிஎல் தொடரில் பெரிதாக தொடங்க முடியவில்லை. ஆனால், 2010 முதல் தொடர்ச்சியாக நன்றாக விளையாட தொடங்கினேன்.

பின்னர், 2011 முதல் தொடர்ச்சியாக நம்.3இல் களமிறங்கினேன். அப்போதுதான் எனது ஐபிஎல் வாழ்க்கை தொடங்கியது.

ஐபிஎல் வித்தியாசமானது

ஐபிஎல் தொடர் கட்டமைக்கப்பட்டிருக்கும் வித்தினால் அது தனித்துவமான மிகவும் சவலானதாக இருக்கிறது.

இது குறுகிய இருதரப்பு தொடர்களாக இல்லாமல், பல வாரங்களில் நடைபெறுகிறது. புள்ளிப் பட்டியலில் மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கும். அந்த மாற்றம் தொடர்ச்சியாக அழுத்தத்தை அளிக்கும்.

இதனால்தான் மற்ற தொடர்களைவிட ஐபிஎல் தொடரின் இயல்பு நம்மை மன ரீதியாக சவால் அளிக்கும். இதுதான் எனது டி20 திறமையை வளர்க்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.