அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

84% கட்டுப்பாட்டுடன் விளையாடிய ஜெய்ஸ்வால்: 11-ஆவது அரைசதம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜெய்ஸ்வால் அரைசதமடித்தார்.

News image
ஜெய்ஸ்வால் - படம்: ஜியோ ஹாட்ஸ்டார்.
Updated On :13 ஏப்ரல் 2025, 11:16 am

DIN

ஜெய்பூரில் நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

பேட்டிங் செய்துவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 ஓவர்கள் முடிவில் 107/2 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 35 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இந்த சீசனில் சுமாராக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் தற்போது சிறப்பாக விளையாடி ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

50 ஐபிஎல் போட்டிகளில் 1,700க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ள ஜெய்ஸ்வால் தற்போது 11ஆவது அரைசதத்தினை நிறைவு செய்துள்ளார்.

ஜெய்பூர் திடலில் தனது 3ஆவது அரைசதத்தையும் இதன் மூலம் நிறைவு செய்துள்ளார்.

சுழல்பந்துகளுக்கு சாதகமான ஜெய்பூர் பிட்ச்சில் 84 சதவிகிதம் கட்டுப்பாட்டில் விளையாடி வருகிறார்.

தேவையில்லாமல் பேட்டினை சுற்றாமல் பந்தினைப் பார்த்து அடித்து சிறப்பாக விளையாடி 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.