எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சென்னை அணியில் 17 வயது இளம் வீரர் அறிமுகம்! சீனியர் வீரருக்கு ஓய்வு!

ராகுல் திரிபாதிக்கு ஓய்வு, ஆயுஷ் மாத்ரே சென்னை அணி வீரராக இன்று முதல் ஐபிஎல் ஆட்டத்தில் அறிமுகம்

News image
ஆயுஷ் மாத்ரே- படம் | சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவு
Updated On :20 ஏப்ரல் 2025, 2:15 pm

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ராகுல் திரிபாதிக்கு இன்றைய ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக 17 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே சென்னை அணிக்காக தமது முதல் ஐபிஎல் ஆட்டத்தில் அறிமுக வீரராக களமிறக்கப்பட்டுள்ளார்.

மும்பையை சேர்ந்த வலது கை ஆட்டக்காரரான ஆயுஷ் மாத்ரே, மாற்று வீரராக சென்னை அணியில் புதிய வரவாக சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்க்கு பதிலாக ஆயுஷ் மாத்ரே அணியில் இணைந்துள்ளார்.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பேட்டிங்கில் மிரட்டிய ஆயுஷ் மாத்ரே, 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணியில் நன்றாக விளையாடி ரன்களை திரட்டி கவனத்தை ஈர்த்தவர். இந்தநிலையில், அவர் மீதான மிகுந்த நம்பிக்கையால் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அவரை தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் ஆட்டங்களில் பெரிதாக சோபிக்காத திரிபாதி மீது சென்னை அணி நம்பிக்கையை இழந்ததன் காரணமாகவே, மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான இன்றைய ஆட்டத்தில் ஆயுஷ் மாத்ரேவுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று(ஏப். 20) நடைபெறும் 38-ஆவது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது. வான்கடே திடலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய சென்னை அணி வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.