முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரச்சின் ரவீந்திரா பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்று முன் தினம் (மார்ச் 22) தொடங்கியது. ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. சென்னை சூப்பர் கிங்ஸில் பந்துவீச்சில் நூர் அகமது அபாரமாக செயல்பட்டார். பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா சிறப்பாக செயல்பட்டார்.
சுழற்பந்துவீச்சாளர்களுக்கு புகழாரம்
இந்த ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கிய நிலையில், மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் அபாரமாக பந்துவீசிய சிஎஸ்கேவின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ரச்சின் ரவீந்திரா புகழாரம் சூட்டியுள்ளார்.

நூர் அகமது - படம் | ஐபிஎல்
மும்பைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது குறித்து ரச்சின் ரவீந்திரா பேசியதாவது: ரவிச்சந்திரன் அஸ்வின் உலகத் தரத்திலான சிறந்த பந்துவீச்சாளர். அவருக்கு எதிராக நான் விளையாடியுள்ளேன். அவருடைய அனுபவம், கிரிக்கெட் குறித்த அறிவு, பந்துவீச்சு தொடர்பாக அவர் கொடுக்கும் அறிவுரை அனைத்தும் சிறப்பாக இருக்கும். ஆட்டத்தினை நன்றாக புரிந்துகொண்டு அதற்கேற்ப சிறப்பாக சிந்தித்து செயல்படக் கூடியவர். அவரைப் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் சிஎஸ்கே அணியில் இணைந்து விளையாடுவதை கௌரவமாக கருதுகிறேன்.
இதையும் படிக்க: வர்ணனையில் இனவெறி கருத்து! சிக்கலில் ஹர்பஜன் சிங்!
சிஎஸ்கேவில் சுழற்பந்துவீச்சு வரிசை மிகவும் வலுவாக உள்ளது. அணியில் சுழற்பந்துவீச்சு வலுவாக இருப்பது அணி சமபலத்துடன் இருப்பதை உறுதி செய்கிறது. சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டது அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது என்றார்.
மும்பைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற போராடும் கேகேஆர்; தாயகம் திரும்பும் ரச்சின் ரவீந்திரா!

ஐபிஎல் 2026: வாழ்வா? சாவா? போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சு!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக ஐபிஎல்-லிருந்து ரச்சின் ரவீந்திரா பாதியிலேயே விலகல்!
மும்பையை எளிதாக வீழ்த்தியது சென்னை!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



