விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி! அதிர்ச்சி விடியோ! எவ்வளவு பெரிய பள்ளம்?அடுத்த ஜென்மம் எதற்கு? இப்போதே விவசாயிகளுக்கு செய்யலாமே! பிரேமலதாதைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்! வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

சுனில் நரைனிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்: குல்தீப் யாதவ்

சுனில் நரைனிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டதாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

News image

குல்தீப் யாதவ் - படம் | ஐபிஎல்

Updated On :30 மார்ச் 2025, 4:52 pm IST

சுனில் நரைனிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டதாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான குல்தீப் யாதவ், நடப்பு ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசினார். லக்னௌவுக்கு எதிராக 4 ஓவர்கள் வீசிய அவர் வெறும் 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மனம் திறந்த குல்தீப் யாதவ்

லக்னௌவுக்கு எதிரான முதல் போட்டியில் அபாரமாக பந்துவீசிய நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியபோது, சுனில் நரைனிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டதாக குல்தீப் யாதவ் மனம் திறந்துள்ளார்.

இது தொடர்பாக ஜியோஸ்டாரில் அவர் பேசியதாவது: ஒரு பந்துவீச்சாளராக நீங்கள் போட்டியில் கண்டிப்பாக ஆதிக்கம் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சுனில் நரைன் போன்ற வீரர்கள் அதனை தொடர்ச்சியாக செய்திருக்கிறார்கள். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியபோது, சுனில் நரைனிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன். பந்துவீச்சு லென்த்துக்கு அவர் எப்போதும் முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்துவார்.

முன்பெல்லாம், நான் என்னுடைய திறமையை மட்டுமே நம்பி செயல்படுவேன். ஆனால், தற்போது சுனில் நரைன் கூறிய விஷயங்கள் முற்றிலும் சரியானவை என்பதை உணர்கிறேன். நான் என்னுடைய பந்துவீச்சு லென்த்தில் அதிக கவனம் கொடுக்கிறேன். அது எனது பந்துவீச்சில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தியது என்றார்.

பல ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சுனில் நரைனுடன் இணைந்து விளையாடிய குல்தீப் யாதவ், கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் தில்லி கேபிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.