காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இந்திய அணியின் சிறந்த கேப்டனாக மாறவிருக்கும் ஷுப்மன் கில்: ரஷித் கான்

இந்திய அணியின் மிகவும் சிறந்த கேப்டனாக ஷுப்மன் கில் மாறப்போவதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

News image
ஷுப்மன் கில்- படம் | AP
Updated On :3 மே 2025, 2:35 pm

DIN

இந்திய அணியின் மிகவும் சிறந்த கேப்டனாக ஷுப்மன் கில் மாறப்போவதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார். கேப்டனாக முதல் சீசன் அவருக்கு சரியாக அமையாவிட்டாலும், இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸை அவர் மிகவும் வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார்.

ரஷித் கான் கூறுவதென்ன?

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வரும் ஷுப்மன் கில், இந்திய அணியின் மிகவும் சிறந்த கேப்டனாக மாறப் போவதாக ரஷித் கான் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ரஷித் கான்

ரஷித் கான்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: குஜராத் டைட்டன்ஸ் அணியை இரண்டாவது சீசனாக ஷுப்மன் கில் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் அவரது ஆட்டம் சிறப்பாக மாறிக்கொண்டே வருகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மட்டுமின்றி, எதிர்காலத்தில் இந்திய அணிக்கும் அவர் சிறந்த கேப்டனாக மாறப் போகிறார். அவருக்கு அந்த திறமை இருக்கிறது. ஆனால், கேப்டனாக செயல்படும் ஒருவர் அணியின் தலைமைப் பயிற்சியாளரிடம் நல்ல நட்பை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியம். அது கேப்டனின் வேலையை எளிதாக்கும்.

கடந்த சீசன் எங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்தோம். இருப்பினும், போட்டியின் முடிவுகள் எங்களுக்கு சாதகமானதாக அமையவில்லை. கேப்டன் மற்றும் தலைமைப் பயிற்சியாளருக்கு இடையே நல்ல புரிதல் இருப்பது மிகவும் முக்கியம். ஆஷிஸ் நெஹ்ரா மற்றும் ஷுப்மன் கில் இடையே நல்ல புரிதல் இருப்பதாக உணர்கிறேன் என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்டன்ஸ் 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள கேப்டன் ஷுப்மன் கில் 465 ரன்களுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்துள்ளவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.