ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

தில்லி - மும்பை போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுக.! - பிசிசிஐக்கு தில்லி உரிமையாளர் கடிதம்

தில்லி - மும்பை போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என தில்லி உரிமையாளர் கூறியிருப்பதைப் பற்றி...

News image
Updated On :21 மே 2025, 6:30 am

தில்லி - மும்பை இடையிலான போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என தில்லி கேப்பிடல்ஸ் அணியின் உரிமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தத் தொடரில் இதுவரை பெங்களூரு, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் அடுத்த சுற்றான பிளே-ஆஃப்ஸுக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், இன்னும் ஒரு இடத்துக்கு மட்டும் போட்டி நிலவுகிறது.

இன்றிரவு மும்பை வான்கடேயில் நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் - தில்லி கேப்பிடல்ஸ் இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி 4-வது இடத்தைப் பிடிக்கும் என்பதால் இந்தப் போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், இன்றிரவு வான்கடேயில் போட்டி நடைபெறுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுஒருபுறமிருக்க தில்லி அணியின் உரிமையாளரான பார்த் ஜிண்டால், இந்தப் போட்டியை மும்பையில் இருந்து வேறு கிரிக்கெட் திடலுக்கு மாற்ற வேண்டும் என்று பிசிசிஐக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தில்லி - மும்பை இடையிலான ஆட்டம், அதிகாரபூர்வமற்ற காலிறுதி போன்ற போட்டியாகும். இந்தப் போட்டி மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட வாய்ப்பிருக்கிறது. மோசமான வானிலை காரணமாக பெங்களூரு - ஹைதராபாத் இடையிலான போட்டி பெங்களூருவில் இருந்து லக்னௌவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அதேபோல, இந்தப் போட்டியையும் மாற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.