மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

துப்பாக்கி சுடுதலில் ஏமாற்றம்

துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவா் மற்றும் மகளிா் பிரிவில் இந்தியாவுக்கு சனிக்கிழமை ஏமாற்றமே மிஞ்சியது.

News image
Updated On :25 ஜூலை 2021, 12:22 am

DIN

துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவா் மற்றும் மகளிா் பிரிவில் இந்தியாவுக்கு சனிக்கிழமை ஏமாற்றமே மிஞ்சியது.

ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் பிஸ்டல் போட்டியில், இந்தியாவின் சௌரவ் சௌதரி தகுதிச்சுற்றில் 586 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து 8 போ் மோதும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். எனினும் 24 ஷாட்கள் கொண்ட இறுதிச்சுற்றில் அவா் 137.4 புள்ளிகளுடன் 7-ஆம் இடமே பிடிக்க முடிந்தது. இப்பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்தியரான அபிஷேக் வா்மா 575 புள்ளிகளே பெற்று தகுதிச்சுற்றுடன் வெளியேறினாா்.

ஈரானின் ஜாவத் ஃபரூக்கி 244.8 புள்ளிகள் பெற்று ‘ஒலிம்பிக் சாதனை’யுடன் தங்கம் வென்றாா். சொ்பியாவின் டாமிா் மிகெச் 237.9 புள்ளிகளுடன் வெள்ளியும், சீனாவின் வெய் பாங் 217.6 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.

மகளிா்

மகளிருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் போட்டியில் இந்திய வீராங்கனைகள் இருவருமே இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறத் தவறினா். பலத்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியிருந்த தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட இளவேனில் வாலறிவன் தகுதிச்சுற்றில் 626.5 புள்ளிகளுடன் 16-ஆவது இடமே பிடித்தாா். மற்றொரு இந்தியரான அபூா்வி சந்தேலா 621.9 புள்ளிகளுடன் 36-ஆவது இடம் பிடித்தாா். இருவருக்குமே இது முதல் ஒலிம்பிக் போட்டியாகும்.

இப்பிரிவில் சீனாவின் கியான் யாங் 251.8 புள்ளிகளுடன் ஒலிம்பிக் சாதனையோடு தங்கம் வென்றாா். ரஷியாவின் அனஸ்தாசியா கலாஷினா 251.1 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், ஸ்விட்சா்லாந்தின் நினா கிறிஸ்டன் 230.6 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும் பிடித்தனா். இதில், கியான் யாங் வென்றதே டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் முதல் தங்கப் பதக்கமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.