டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாட்மின்டனில் அரையிறுதிக்கு முன்னேறினார் லக்‌ஷயா சென்!

பாரீஸ் ஒலிம்பிக்கில் பாட்மின்டன் ஆடவர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் லக்‌ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேறினார்.

News image

லக்‌ஷயா சென்

Updated On :2 ஆகஸ்ட் 2024, 5:18 pm

DIN

பாரீஸ் ஒலிம்பிக்கில் பாட்மின்டன் ஆடவர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் லக்‌ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஒலிம்பிக் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 22 வயதான இந்தியாவின் லக்‌ஷயா சென் மற்றொரு இந்திய வீரரான ஹெச்.எஸ்.பிரனாயை வீழ்த்தி காலிறுதியில் முன்னேறினார்.

லக்‌ஷயா சென் இன்று (ஆக.2) நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் 12-ஆம் நிலை வீரரான சீன தைபே வீரர் சோ டைனை எதிர்கொண்டார்.

முதல் செட்டினை சோ டைன் கைப்பற்ற அடுத்த 2 செட்களையும் லக்‌ஷயா சென் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

Story image

லக்‌ஷயா சென் பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவாலுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் பாட்மின்டன் ஒற்றையர் அரையிறுதிக்குள் நுழைந்த முதல் இந்திய ஆண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

அவர் பதக்கம் வெல்வதற்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே எஞ்சியுள்ளது. லக்‌ஷயா சென்னுக்கு முன்னதாக, கிடாம்பி ஸ்ரீகாந்த் (2016), பருபள்ளி காஷ்யப் (2012) ஆகியோர் கால் இறுதிக்குள் நுழைந்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.