மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

பாட்மின்டனில் அரையிறுதிக்கு முன்னேறினார் லக்‌ஷயா சென்!

பாரீஸ் ஒலிம்பிக்கில் பாட்மின்டன் ஆடவர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் லக்‌ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேறினார்.

News image

லக்‌ஷயா சென்

Updated On :2 ஆகஸ்ட் 2024, 10:48 pm IST

பாரீஸ் ஒலிம்பிக்கில் பாட்மின்டன் ஆடவர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் லக்‌ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஒலிம்பிக் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 22 வயதான இந்தியாவின் லக்‌ஷயா சென் மற்றொரு இந்திய வீரரான ஹெச்.எஸ்.பிரனாயை வீழ்த்தி காலிறுதியில் முன்னேறினார்.

லக்‌ஷயா சென் இன்று (ஆக.2) நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் 12-ஆம் நிலை வீரரான சீன தைபே வீரர் சோ டைனை எதிர்கொண்டார்.

முதல் செட்டினை சோ டைன் கைப்பற்ற அடுத்த 2 செட்களையும் லக்‌ஷயா சென் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

Story image

லக்‌ஷயா சென் பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவாலுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் பாட்மின்டன் ஒற்றையர் அரையிறுதிக்குள் நுழைந்த முதல் இந்திய ஆண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

அவர் பதக்கம் வெல்வதற்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே எஞ்சியுள்ளது. லக்‌ஷயா சென்னுக்கு முன்னதாக, கிடாம்பி ஸ்ரீகாந்த் (2016), பருபள்ளி காஷ்யப் (2012) ஆகியோர் கால் இறுதிக்குள் நுழைந்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.