
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 68 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவியுள்ளார் இந்திய வீராங்கனை நிஷா தஹியா.
முன்னதாக, இன்று(ஆக. 5) மாலை நடைபெற்ற காலிறுத்திக்கு முந்தைய சுற்றில் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் உக்ரைனின் டெட்டியானா சோவா ரிஷ்கோவை வீழ்த்தி வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தார் நிஷா தஹியா.
அதனைத் தொடர்ந்து, இரவு நடைபெற்ற காலிறுதிச் சுற்றுப் போட்டியில் அவர் வட கொரிய வீராங்கனை பாக் சோல் கம்மிடம் 8-10 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.