பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

என் மீதான விமர்சனங்களுக்கு இதுவே சரியான பதிலாக இருக்கும்: இமென் கெலிஃப்

பாரீஸ் ஒலிம்பிக்கில் தனது பாலினம் தொடர்பாக தவறான எண்ணங்கள் மற்றும் வெறுப்புணர்வை பலரும் வெளிப்படுத்தியது குறித்து இமென் கெலிஃப் பேசியது...

இமென் கெலிஃப் - படம் | AP

Published On :

பாரீஸ் ஒலிம்பிக்கில் தனது பாலினம் தொடர்பாக தவறான எண்ணங்கள் மற்றும் வெறுப்புணர்வை பலரும் வெளிப்படுத்துவது தனது கண்ணியத்தை பாதிப்பதாகவும், இதுபோன்ற தவறான எண்ணங்கள் மற்றும் விமர்சனங்களால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமென் கெலிஃப் தெரிவித்துள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொண்ட இமென் கெலிஃப் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒலிம்பிக்கின் தத்துவங்களையும், அதன் விதிகளையும் அனைவரும் மதிக்க வேண்டும் என்ற செய்தியை உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் கூறிக் கொள்கிறேன். ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் மீது வெறுப்பு பிரசாரம் மற்றும் தவறான எண்ணங்கள் மூலம் அவர்களது மனதினை காயப்படுத்தாதீர்கள். ஏனென்றால், உங்களுடைய இதுபோன்ற செயல்கள் பாதிக்கப்படுபவரின் வாழ்க்கையில் மனதளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற தவறான எண்ணங்கள் மக்களை அழித்துவிடும். மக்களின் எண்ணங்களை அழித்துவிடும். மக்களை பிளவுப்படுத்திவிடும். அதன் காரணமாகவே வீரர், வீராங்கனைகளை கேலி, கிண்டல்களுக்கு ஆளாக்குவதிலிருந்து விலகி இருங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன். வாரத்தில் இரு முறை நான் எனது குடும்பத்தினருடன் பேசி அவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். பாரீஸ் ஒலிம்பிக்கில் நடந்த விஷயங்கள் மற்றும் என் மீதான விமர்சனங்கள் அவர்களை ஆழமாக பாதித்திருக்காது என நம்புகிறேன். அவர்கள் என்னைப் பற்றி கவலைப்படுகிறார்கள்.

கடவுள் மனது வைத்தால், எனது இந்தப் போராட்டம் தங்கப் பதக்கத்தில் சென்று முடியும். தங்கப் பதக்கம் வென்றால், அது என்மீதான விமர்சனங்கள் மற்றும் தவறான எண்ணங்களுக்கு நான் கொடுக்கும் சரியான பதிலாகவும் இருக்கும். ஒலிம்பிக் குழு எனக்கு நீதி வழங்கியுள்ளது எனத் தெரியும். ஒலிம்பிக் குழு என்னுடைய விஷயத்தில் நடந்துகொண்ட விதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. அவர்கள் உண்மையின் பக்கம் இருக்கிறார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.