மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் வில்வித்தை: இந்திய வீராங்கனை அசத்தல்!

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் வில்வித்தையில் இந்திய வீராங்கனை காலிறுதி சுற்றுக்கு முந்தைய சுற்று முன்னேறினார்.

News image

தீபிகா குமாரி - படம் | olympics2024

Updated On :31 ஜூலை 2024, 6:09 pm IST

பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் வில்வித்தையில் தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

உலகின் முன்னாள் நம்பர்.1 வீராங்கனையான இந்திய வில்வித்தை வீராங்கனையான தீபிகா குமாரி, பெண்களுக்கான தனிநபர் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று, பாரீஸ் ஒலிம்பிக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்று முன்னேறினார்.

நான்கு முறை ஒலிம்பியனான தீபிகா, புதன்கிழமை லெஸ் இன்வாலைட்ஸ் மைதானத்தில் நடந்த 32 ஆவது சுற்றில் நெதர்லாந்து வில்வீரர் குயின்டி ரோஃபெனை 6-2 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

தீபிகா முதல் செட்டில் வெற்றிபெற்றார். ஆனால், ரோஃபென் இரண்டாவது செட்டை சமன் செய்தார். இருப்பினும், தீபிக குமாரி, அடுத்த இரண்டு செட்களில் வெற்றியை தன் வசப்படுத்தினார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜெர்மன் வில்வித்தை வீராங்கனையான மிச்செல் க்ரோப்பனை எதிர்த்து, வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி (சனிக்கிழமை) மதியம் நடக்கும் பெண்களுக்கான தனிநபர் வில்வித்தைக்கு முந்தைய காலிறுதிப் போட்டியில் தீபிகா மோதுகிறார்.

இந்திய வீராங்கனை பஜன் கவுர், சனிக்கிழமை நடைபெறும் 16வது பெண்கள் சுற்றில், இரண்டு முறை ஆசிய விளையாட்டுப் பதக்கம் வென்ற தியானந்தா சொய்ருனிசாவை எதிர்கொள்ள இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.