மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

லோதா குழு பரிந்துரையை அமல்படுத்த புதிய கமிட்டி: பிசிசிஐ பொதுக்குழுவில் முடிவு

லோதா குழுவின் பரிந்துரையை சிறப்பாகவும், வேகமாகவும் அமல்படுத்துவது குறித்து ஆராய புதிய கமிட்டி அமைப்பது என மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2017, 7:09 pm

DIN

லோதா குழுவின் பரிந்துரையை சிறப்பாகவும், வேகமாகவும் அமல்படுத்துவது குறித்து ஆராய புதிய கமிட்டி அமைப்பது என மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிசிசிஐயின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மும்பையில் திங்கள்கிழமை 2 மணி, 45 நிமிடங்கள் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிசிசிஐ தலைவரான என்.சீனிவாசனும் கலந்துகொண்டார். எனினும் பிசிசிஐ நிர்வாகக் குழு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இந்தக் கூட்டத்தில் உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக பிசிசிஐ செயலர் (பொறுப்பு) அமிதாப் செளத்ரி கூறியதாவது: லோதா குழுவின் பரிந்துரைகளை சிறப்பாகவும், வேகமாகவும் அமல்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு 5 அல்லது 6 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படும். இந்தக் கமிட்டி அடுத்த இரண்டு நாள்களில் பணியைத் தொடங்கும். இந்தக் கமிட்டி அறிக்கை அளிக்க 15 நாள் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.
பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தலின்போது ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்குரிமை மட்டுமே இருக்க வேண்டும், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் பதவியில் இருக்கக்கூடாது, பிசிசிஐ நிர்வாகிகள் ஒரு முறை பதவியில் இருந்துவிட்டால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக்கூடாது, இந்திய அணியின் தேர்வுக்குழுவில் 3 பேர் மட்டுமே இடம்பெற வேண்டும் என்பவை லோதா குழுவின் பரிந்துரைகளில் மிக முக்கியமானதாகும். ஆனால் இவை அனைத்துக்கும் பிசிசிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து புதிதாக அமைக்கப்படும் கமிட்டி தீவிரமாக பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானுடனான இரு தரப்பு கிரிக்கெட் தொடர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமிதாப் செளத்ரி, "அரசு அனுமதியளித்தால் மட்டுமே பாகிஸ்தானுடன் இரு தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.