மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோலியின் மனநிலையில் மாற்றம்: ரஹானே 4-வதாகக் களமிறங்குவார் என அறிவிப்பு!

இதற்கு முன்பு மூன்றாவது தொடக்க வீரராக ரஹானே கருதப்படுவார் எனக் கூறியிருந்தேன்...

News image
Updated On :1 பிப்ரவரி 2018, 10:43 am

எழில்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரஹானே 4-வதாகக் களமிறங்குவார் என்று கேப்டன் கோலி கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் இதுவரை ஒரு டெஸ்ட் தொடரைக் கூட கைப்பற்றாத இந்தியா, சமீபத்தில் நிறைவடைந்த டெஸ்ட் தொடரையும் 2-1 என இழந்தது. ஒருநாள் கிரிக்கெட்டிலும் அதே கனவு தொடரும் நிலையில், இந்தத் தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த 1992 முதல் தென் ஆப்பிரிக்காவில் இதுவரை ஆடிய 28 ஒருநாள் ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா 21 வெற்றிகளையும், இந்தியா 5 வெற்றிகளையும் பெற்றுள்ளன. எனினும், கடந்த 2016 ஜனவரிக்குப் பிறகு உள்நாடு மற்றும் வெளிநாட்டிலுமாக அனைத்து ஒருநாள் தொடர்களிலும் இந்தியா தோல்வியே காணாதது அணிக்கான பலம்.

தொடர் வெற்றிக் கனவு ஒருபுறம் இருக்க, ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பெறுவதற்கான வாய்ப்பும் இந்தத் தொடரின் மூலம் இந்தியாவுக்கு உள்ளது. 6 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரை 4-2 என இந்தியா வென்றால், முதலிடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்காவை பின்னுக்குத்தள்ளி, இந்திய முதல் அணியாக மாறும். டர்பனின் கிங்ஸ்மீட் மைதானத்தில் இதுவரை 7 ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதியுள்ள இந்தியா, ஒரு வெற்றியை கூட சுவைத்ததில்லை. 6 ஆட்டங்களில் தோற்ற நிலையில், ஒரு ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை. 

இந்நிலையில் ஒருநாள் போட்டியில் ரஹானேவைத் தொடக்க வீரராக மட்டுமே கருதமுடியும் என்று சமீபகாலமாகச் சொல்லிவந்த கேப்டன் கோலி தன் முடிவை மாற்றியுள்ளார். தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் ரஹானே, 4-வதாகக் களமிறங்க வாய்ப்புண்டு என்று கருத்து தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்திய ஒருநாள் அணியில் ரஹானேவுக்கு மீண்டும் நிரந்தரம் இடம் கிடைக்கவுள்ளது. இதுகுறித்து கோலி கூறியதாவது:

இதற்கு முன்பு மூன்றாவது தொடக்க வீரராக ரஹானே கருதப்படுவார் எனக் கூறியிருந்தேன். இந்தச் சூழல் மாறலாம். ஏனெனில் உலகக் கோப்பைப் போட்டியில் ஏற்கெனவே 4-வதாக ரஹானே ஆடியுள்ளார். தென் ஆப்பிரிக்கச் சூழலில் இன்னிங்ஸ் முழுக்க வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். எனவே 4-வதாகக் களமிறங்க அவர் முதன்மைத் தேர்வாக இருப்பார். அதன்பிறகு ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, கெதர் ஜாதவ் ஆகியோரில் ஒருவர் 5-வதாக களமிறங்கலாம். அதன்பிறகு பாண்டியாவும் தோனியும் களமிறங்குவார்கள். குறிப்பிட்ட அந்த ஓர் இடத்தை யார் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியமானது. அதற்கு முன்பும் அதற்குப் பிறகும் பிரச்னையில்லை. பின்வரிசை வீரர்கள் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டார்கள். பாண்டியா, ஜாதவ், தோனி ஆகியோர் மாறி மாறியும் ஒன்றாகவும் ஆடிவருகிறார்கள். 4-வதாகக் களமிறங்கும் வீரர் குறித்துதான் பலவிதங்களில் பரிசோதனை செய்துவருகிறோம்.  அந்த ஓர் இடம்தான் முடிவு செய்யப்படாமல் உள்ளது. மற்றபடி அணியில் மாற்றம் செய்வதற்கு ஒன்றுமில்லை என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.