ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

அம்பட்டி ராயுடு இரண்டு ஆட்டங்களில் விளையாடத் தடை! பிசிசிஐ அதிரடி நடவடிக்கை!

போட்டியின் முடிவை ராயுடு ஏற்காமல், உடனடியாக சூப்பர் ஓவரைத் தொடங்கவேண்டும் என்று நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தார்...

News image
Updated On :31 ஜனவரி 2018, 7:44 am

எழில்

சையத் முஸ்டாக் அலி போட்டியில் பிசிசிஐ விதிமுறைகளுக்கு எதிராக நடந்துகொண்ட இந்திய வீரர் அம்பட்டி ராயுடு, இரண்டு ஆட்டங்களில் விளையாட பிசிசிஐ தடை விதித்துள்ளது. 

இதனால் விஜய் ஹசாரே போட்டியில் ஹைதராபாத்தின் இரு ஆட்டங்களில் ராயுடுவால் கலந்துகொள்ளமுடியாது. 

ஹைதராபாத் - கர்நாடகா அணிகளுக்கு இடையிலான சையத் முஸ்டாக் அலி போட்டியில் ஒரு சர்ச்சை ஏற்பட்டது. இரண்டாவது ஓவரின்போது பந்தை பீல்டிங் செய்த ஹைதராபாத் வீரரின் கால் பவுண்டரி கயிறில் பட்டதால் அதற்கு கர்நாடக அணியின் ஆட்டம் முடிவடைந்தபிறகு பவுண்டரி வழங்கப்பட்டது (சம்பவத்தின்போது நடுவர் அதை பவுண்டரி என அறிவிக்கவில்லை). கர்நாடக அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. அதில் கூடுதலாக இரு ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் 206 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு ஹைதராபாத் கேப்டன் ராயுடு எதிர்ப்பு தெரிவித்தார். உடனே நடுவர்கள், ஆட்டம் முடிந்தபிறகு இந்த சர்ச்சையைக் கவனிக்கலாம் என்று கூறி சமாதானப்படுத்தினார்கள். இதனால் ஆட்டம் 9 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது. கடைசியில் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் சர்ச்சை ஆட்டம் முடிந்தபிறகும் தொடர்ந்தது.

போட்டியின் முடிவை ராயுடு ஏற்காமல், இரு அணிகளும் சமநிலையில் உள்ளதால் உடனடியாக சூப்பர் ஓவரைத் தொடங்கவேண்டும் என்று நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் அதே மைதானத்தில் அடுத்து விளையாட வேண்டிய ஆட்டம் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து விளக்கமளிக்க ராயுடுவுக்கும் ஹைதராபாத் மேலாளருக்கும் பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் ராயுடு இரு ஆட்டங்களில் பங்கேற்க பிசிசிஐ தற்போது தடை விதித்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ராயுடுவை ரூ. 2.20 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.