வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

ஆசியப் போட்டிக்கான இந்திய ஆடவர் ஹாக்கி அணி அறிவிப்பு

ஜாகர்த்தாவில் நடக்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய ஆடவர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.அண்மையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் வெ

News image

இந்திய ஆடவர் ஹாக்கி அணி.

Updated On :9 ஜூலை 2018, 7:38 pm

ஜாகர்த்தாவில் நடக்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய ஆடவர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில் இந்திய அணி அடுத்து ஆகஸ்டில் ஆசியப் போட்டியில் பங்கேற்கிறது. 
கோல்கீப்பர் பிஆர்.ஸ்ரீஜேஷ் தலைமையிலான 18 பேர் கொண்ட அணியில் பெனால்டி கார்னர் நிபுணர் ரூபிந்தர் பால் சிங், முன்கள வீரர் அகஷ்தீப் சிங் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். சிங்கலெசெனா சிங் துணைக் கேப்டனாக உள்ளார். 
கடந்த 2014 இன்சியானில் நடந்த ஆசியப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது. ஜாகர்த்தா ஆசியப் போட்டியில் தங்கம் வென்றால், 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறலாம். 
அணி விவரம்: பிஆர்.ஸ்ரீஜேஷ், கிருஷண் பி பதக், ஹர்மன்பிரீத் சிங், வருண்குமார், பிரேந்திர லக்ரா, சுரேந்தர் குமார், ரூபிந்தர் பால் சிங், அமித் ரோஹிதாஸ், மன்பிரீத் சிங், சிங்கலெசெனா சிங், சிம்ரஞ்சித் சிங், சர்தார் சிங், விவேக்சாகர் பிரசாத், எவி.சுனில், மந்தீப் சிங், அகஷ்தீப் சிங், லலித்குமார் உபாத்யாய், தில்பிரீத் சிங்.
இதுதொடர்பாக அணியின் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கூறுகையில்: 
அணியின் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. ரமண்தீப் சிங் இல்லாதது சிறிது இழப்பு தான். எனினும் ரூபிந்தர் பால், அகஷ்தீப் சிங் ஆகியோர் இணைந்துள்ளது சாதகமான அம்சம். பெங்களூருவில் தேசிய முகாம் நடைபெறும். 
தென்கொரியாவுடன், நியூஸிலாந்துடன் 5 பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. தங்கம் வென்று ஒலிம்பிக் போட்டிக்கு நேரடித் தகுதி பெறுவதை நோக்கமாக கொண்டுள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.