திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

உலக மல்யுத்த சாம்பியன் போட்டி: 30 பேர் இந்திய அணி பங்கேற்பு

உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்தியாவின் சார்பில் 30 பேர் கொண்ட அணி கலந்து கொள்கிறது.

Updated On :9 அக்டோபர் 2018, 1:00 am IST


உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்தியாவின் சார்பில் 30 பேர் கொண்ட அணி கலந்து கொள்கிறது.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் வரும் 20 முதல் 28-ஆம் தேதி வரை உலக சாம்பியன் போட்டி நடக்கிறது. இதில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், ஆசியப் போட்டி தங்கப் பதக்க வீரர் பஜ்ரங் புனியா தலைமையில் 30 பேர் அணி பங்கேற்கிறது.
பஜ்ரங் 65 கிலோ பிரீஸ்டைல், சாக்ஷி மாலிக் 62 கிலோ, பூஜா தண்டா 57 கிலோ உள்ளிட்டவை உள்பட ப்ரீஸ்டைல், கிரெகோ ரோமன், மகளிர் பிரிவுகளில் தலா 10 பேர் பங்கேற்கின்றனர்.
ஜக்மிந்தர் சிங், குல்தீப் மாலிக் பயிற்சியாளர்களாக செல்கின்றனர். போகட் சகோதரிகளில் ரிது மட்டுமே பங்கேற்கிறார். கீதா, பபிதா தேர்வுப் போட்டியில் பங்கேற்கவில்லை. வினேஷ் போகட் காயத்தால் கலந்து கொள்ளவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.