ஜகார்த்தா: குத்துச் சண்டை போட்டிகளில் நடுவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்புகள் வழங்கியிருப்பதாக சந்தேகிக்கும் பட்சத்தில், அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை கொண்டுவர சர்வதேச குத்துச்சண்டை சங்கம் (ஏஐபிஏ) முடிவு செய்துள்ளது.
போட்டி முடிவுகள் நியாயமாக இருப்பதையும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் நிகழ்ந்ததைப் போன்ற சர்ச்சைக்குரிய சம்பவங்களைத் தடுப்பதையும் உறுதி செய்யும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏஐபிஏவின் நிர்வாக இயக்குநர் டாம் விர்கெட்ஸ் கூறுகையில், "போட்டிகளின்போது சர்ச்சைக்குரிய நடுவர் முடிவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான குழு ஒன்றை அமைக்க உள்ளோம்' என்றார்.
இந்தோனேஷியாவில் நிறைவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவருக்கான குத்துச்சண்டை இறுதிச்சுற்று ஒன்றில் வட கொரிய-சீன வீரர்கள் மோதினர்.
அதில் சீன வீரர் தங்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. நடுவர்களின் அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த வட கொரிய வீரரின் பயிற்சியாளர்கள் இருவர், குத்துச்சண்டை களத்தை விட்டு வெளியேற மறுத்தனர்.
இதையடுத்து போலீஸாரின் உதவியோடு அவர்கள் வெளியேற்றப்பட்டதுடன், அவர்களுக்கான ஆசியப் போட்டி அங்கீகாரம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜடேஜா, ஆர்ச்சர், பிரிஜேஷ் அசத்தல்: லக்னௌவை வீழ்த்தியது ராஜஸ்தான்

இன்று மும்பையை சந்திக்கும் சென்னை

யு-19 டேபிள் டென்னிஸ்: தமிழ்நாடு ஆடவா் சாம்பியன்

மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்: இந்திய அணியில் இரு தமிழா்கள்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

