தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன்: காலிறுதிச் சுற்றில் இந்திய இணை

தாய்லாந்து ஓபன் பாட்மிண்டனில் இந்தியாவின் சாய்னா நேவால் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் தங்களது இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினர். 
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன்: காலிறுதிச் சுற்றில் இந்திய இணை
Published on
Updated on
1 min read


தாய்லாந்து ஓபன் பாட்மிண்டனில் இந்தியாவின் சாய்னா நேவால் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் தங்களது இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினர். 

மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்திய சாய்னா நேவால், இரண்டாவது சுற்றில் இன்று (வியாழக்கிழமை) ஜப்பான் வீராங்கனை சயாகா டகாஹஷியை எதிர்கொண்டார். முதல் ஆட்டத்தை 21-16 என்று கைப்பற்றி சாய்னா நேவால் ஆதிக்கம் செலுத்தினார். ஆனால், அடுத்த இரண்டு ஆட்டங்களில் 11-21, 14-21 என இழந்தார் சாய்னா. 48 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் சாய்னா நேவால் 21-16, 11-21, 14-21 என்கிற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். 

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தாய்லாந்து வீரர் கோசித் பெத்பிரதாப்பை எதிர்கொண்டார். இவரும் முதல் ஆட்டத்தை 21-11 என்ற கணக்கில் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தினார். ஆனால், அடுத்த இரண்டு ஆட்டங்களை இழந்தார். இதன்மூலம், 21-11, 16-21, 12-21 என்கிற கணக்கில் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார். 

மற்றொரு இந்திய வீரரான பாருபள்ளி காஷ்யப்பும் தனது இரண்டாவது சுற்றில் தைவான் வீரரிடம் தோல்வியடைந்தார். 33 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் காஷ்யப் 9-21, 14-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். 

எனினும், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிரக் ஷெட்டி இணை, இந்தோனேஷிய இணையை 21-17, 21-19 என்ற கணக்கில் நேரடியாக வீழ்த்தியது. இதன்மூலம், இந்திய இணை காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com