முஷ்டாக் அலி கோப்பை: தமிழக அணி படுதோல்வி!

சூரத்தில் இன்று தொடங்கிய சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தமிழக அணி தோல்வியடைந்துள்ளது...
முஷ்டாக் அலி கோப்பை: தமிழக அணி படுதோல்வி!
Updated on
1 min read

சூரத்தில் இன்று தொடங்கிய சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தமிழக அணி தோல்வியடைந்துள்ளது.

டாஸ் வென்ற தமிழக அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. கேப்டன் லோம்ரார் 52 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 78 ரன்களும் தில்லான் 19 பந்துகளில் 4 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 38 ரன்களும் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். தமிழக அணியில் எம். அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ராஜஸ்தானின் இந்த ரன்களைத் தொட தமிழக அணி மிகவும் சிரமப்பட்டது. வரிசையாக விக்கெட்டுகள் விழுந்ததால் எந்தவொரு கட்டத்திலும் தமிழக அணியால் நம்பிக்கையுடன் இலக்கை விரட்டமுடியாமல் போனது. ஷாருக் கான் மட்டுமே அதிகபட்சமாக 23 ரன்கள் எடுத்தார். வேறு யாரும் 20 ரன்களைத் தாண்டவில்லை. கடைசியில் 19.5 ஓவர்களில் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தமிழக அணி. இதனால் ராஜஸ்தான் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com