கொடுத்த வாய்ப்பை கோட்டை விட்டால்..! கொட்டித் தீர்க்கும் ரோஹித்

கொடுக்கும் வாய்ப்பை எதிரணியினர் கோட்டை விட்டால் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா ரன் மழையை கொட்டித் தீர்த்து விடுகிறார்.
கொடுத்த வாய்ப்பை கோட்டை விட்டால்..! கொட்டித் தீர்க்கும் ரோஹித்
Updated on
1 min read

கொடுக்கும் வாய்ப்பை எதிரணியினர் கோட்டை விட்டால் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா ரன் மழையை கொட்டித் தீர்த்து விடுகிறார்.

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் 4 சதங்கள் விளாசி, 500 ரன்களுக்கு மேல் குவித்து ரோஹித் ஷர்மா பல சாதனைகளைப் படைத்து வருகிறார். 

இந்நிலையில், நடப்பு தொடரின் 4 ஆட்டங்களில் ரோஹித் ஷர்மா எளிதாக அளிக்கும் கேட்ச் வாய்ப்பை எதிரணியினர் பயன்படுத்தத் தவறி கோட்டை விட்டால், அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி ரன்களைக் குவித்து வருகிறார். சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக கொட்டித் தீர்க்கிறார். 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 1 ரன் எடுத்திருந்தபோது அளித்த எளிய வாய்ப்பை அந்த அணியினர் நழுவ விட்டதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் குவித்தார்.

2 ரன்களில் அளித்த எளிய கேட்ச் வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி நழுவ விட பின்னர் 57 ரன்கள் சேர்த்தார்.

இங்கிலாந்து அணி 4 ரன்கள் இருந்தபோது அளித்த வாய்ப்பை பயன்படுத்தத் தவறியதில் பின்னர் 102 ரன்கள் குவிக்க காரணமாக அமைந்தது.

9 ரன்கள் இருந்தபோது வங்கதேச அணி மிக எளிய கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டதில் 104 ரன்களை விளாசித் தள்ளினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com