மே.இ.தீவுகள் தொடர்: இந்திய அணி தேர்வு திடீரென ஒத்திவைப்பு

ஆகஸ்ட் மாதம் இந்திய-மே.இ.தீவுகள் இடையே அமெரிக்கா மற்றும் மே.இ.தீவுகளில் தலா 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் நடக்கின்றன. 
மே.இ.தீவுகள் தொடர்: இந்திய அணி தேர்வு திடீரென ஒத்திவைப்பு
Published on
Updated on
1 min read

ஆகஸ்ட் மாதம் இந்திய-மே.இ.தீவுகள் இடையே அமெரிக்கா மற்றும் மே.இ.தீவுகளில் தலா 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் நடக்கின்றன. 

ஒருநாள் தொடர் ஆக. 3-இல் தொடங்குகிறது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியின் ஒரு பகுதியாக 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் ஆக. 22-இல் தொடங்குகிறது. 

முதலில் 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடரில், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள ப்ரோவார்ட் கௌன்டி மைதானத்தில் ஆகஸ்டு 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் முதல் இரு போட்டிகளும், கயானாவில் ஆகஸ்டு 6-ஆம் தேதி 3-ஆவது போட்டியும் நடைபெறவுள்ளது.

பின்னர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ஆகஸ்டு 8-ல் கயானாவிலும், 11 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ட்ரினிடட்டிலும் இப்போட்டிகள் நடைபெறுகின்றன.

இதையடுத்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஆண்டிகுவா விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்டு 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியும், ஜமைக்காவின் சபைனா பார்க்கில் ஆகஸ்டு 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 3-ஆம் தேதி வரை 2-ஆவது டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது. 

இதற்கான அணியை தேர்வு செய்ய மத்திய தேர்வாளர் குழு ஜூலை 19-ஆம் தேதி மும்பையில் கூட உள்ளதாக பிசிசிஐ ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளுடனான தொடரில் பங்கேற்கும் இந்திய அணி தேர்வு திட்டமிட்டபடி நடைபெறாது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com