கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் XI குறித்து தெளிவாக உள்ளோம்: விராட் கோலி

இதை ஒரு சாக்காகச் சொல்லவில்லை. ஆனால் கடைசி மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் சிலருக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்தோம்...

News image
Updated On :14 மார்ச் 2019, 9:14 am

எழில்

இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை அந்த அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. தில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இந்தியா 50 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 237 ரன்களுக்கு வீழ்ந்தது. 

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக உஸ்மான் காஜா 100 ரன்கள் விளாசினார். இந்தியத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்திய இன்னிங்ஸில் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் ஆடம் ஸம்பா 3 விக்கெட்டுகள் சாய்த்திருந்தார்.

தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களிடம் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

இந்தத் தோல்வியால் ஓய்வறையில் யாரும் பீதியடையவில்லை. பயிற்சியாளர்கள் யாரும் மனம் தளரவில்லை. ஏனெனில் கடைசி 3 ஒருநாள் ஆட்டங்களில் என்ன வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். இந்த ஒருநாள் தொடருக்குப் பிறகு உலகக் கோப்பையில் விளையாடவேண்டும் என்பதால். நாங்கள் நல்ல அணியாக இருந்தாலும் நெருக்கடியான கட்டங்களில் ஆஸ்திரேலியா எங்களை விடவும் சிறப்பாக விளையாடியது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு கிட்டத்தட்ட சரியான அணியைக் கொண்டுள்ளோம். இங்கிலாந்து சூழலுக்கு ஏற்ப ஒரேயொரு மாற்றம் மட்டுமே இருக்கும். அதைத் தவிர, உலகக் கோப்பைப் போட்டியில் எந்த லெவனைக் கொண்டு விளையாட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். 

கடைசி 3 ஆட்டங்களில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்தோம். குறிப்பிட்ட சூழலில் எப்படி விளையாடுகிறார்கள் என்று பார்க்க எண்ணினோம். இதை ஒரு சாக்காகச் சொல்லவில்லை. ஆனால் கடைசி மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் சிலருக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்தோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.